கவுன்சிலரின் கணவரை பெண்டு நிமிர்த்திய சிங்கப் பெண்! எங்கிருந்தோ வந்து மிரட்டுறீங்களா என சவுண்டு?
டி.ஜி.சாந்தகுமார்,
திமுக கவுன்சிலரையும் அவரது கணவரையும் பெண்டு கழற்றிய சிங்கப் பெண் பற்றின செய்தி தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, நான்காவது மண்டலம், 34-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சர்மிளா காந்தி. இவரது கணவர் பெயர் கருணாநிதி. திமுக வைச் சேர்ந்த மேற்படி கவுன்சிலர் அவரது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஆபிஸ் போட்டு அமர்ந்து வியாபாரத்தை துவக்கியுள்ளார்.
இந்நிலையில் அதே வார்டில் தன்னுடைய சொந்த இடத்தில் ரேவதி என்பவர் வீடு கட்ட துவங்கியிருக்கிறார். அப்போது அவரை தொடர்பு கொண்ட கவுன்சிலர் சர்மிளாவின் கணவர் கருணாநிதி, ஏம்மா ரோடை மூன்று அடி ஆக்கிரமித்து வீடு கட்டுகிறாயே இது நியாயமா? என்னை வந்து ஆபிசுல பார் என்று சொல்லிவிட்டு இணைபை துண்டித்துக் கொண்டார்.
குழப்பமே அடையாத ரேவதி நேரடியாய் கவுன்சிலர் ஆபிசுக்கு போய் அங்கிருந்த கவுன்சிலரையும் அவரது கணவரையும் பெண்டு நிமிர்த்திவிட்டார்.
நான் வீடுகட்டுவதை கேள்வி கேட்க நீங்க யார்? எங்கிருந்தோ எங்க ஏரியாவுக்கு வந்து கவுன்சிலராகிவிட்டு எங்களை மிரட்டுறீங்களா? கவுன்சிலர் கேள்வி கேட்டா கூட பராவாயில்லை, நீங்க எதுக்கு கேள்வி கேக்குறீங்க என்று கருணாநிதியை நோக்கி கேட்டார்.
இதனால் அங்கிருந்த கவுன்சிலரின் ஆதரவாளர்கள், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து ரேவதியை நோக்கி கையை நீட்டி பேசினார்கள். டேய் நீங்க கவுன்சிலரின் அல்லகைகள் தானே, என்னை கொலை பண்ணிவிடுவீங்களா? உட்காருங்கடா என்று ஒரு சவுண்டுவிட்டார் ரேவதி.
கவுன்சிலர்னா நாலு பேருக்கு நல்லது பண்ணவேண்டும், அதை விட்டுவிட்டு, எங்களை போன்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்று சிங்கபெண்ணாய் உறுமினார்.
இதனால் செய்வதறியாது திகைத்த கவுன்சிலரின் கணவர் கருணாநிதி , ரேவதியை பார்த்து இரன்டு கைகளால் கும்பிடு போட்டார்., யம்மா நீ முழுவதுமாக கூட வீடு கட்டிக்கொள் என்று அவரை வழியனுப்பிவைத்தார்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ரேவதியின் உடன் சென்றவர் அதை அப்படியே வெளியிட்டுள்ளதால் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது.