திருவாரூரில் எம்ஜிஆர் 106 ஆவது பிறந்த நாள் விழா!

க.பாலகுரு,
திருவாரூரில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நகர கழகம் சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. அதின் ஒரு பகுதியாக திருவாரூர் நகர கழகம் செயலாளர் ஆர்டி மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் பேரணியாக வந்து புதுத்தெருவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில் வேல், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.