பதவி உயர்வுக்கு  வயதை கணக்கீடு செய்யுங்ளேன் ப்ளீஸ்! வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை!

பதவி உயர்வுக்கு  வயதை கணக்கீடு செய்யுங்ளேன் ப்ளீஸ்! வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை!

த.நெல்சன்.

    தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 2-வது மாவட்ட கோரிக்கை மாநாடு இன்று வேலூரில் நடைபெற்றது.

  இந்த மாநாட்டிற்கு மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட இணைச் செயலாளர்கள் மணி, ஆதிகேசவன், செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ரவி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர் மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  அப்போது 14 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோரிக்கைகளின் விவரம்,

  1. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோருதல். 
  1. புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க கோருதல். 
  1. கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க கோருதல். 
  1. 20% விழுக்காடு என்பதை 30% விழுக்காடாக உயர்த்த கோருதல். 
  1. ஜமாந்தி படி வழங்க கோருதல்.

  1. இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க கோருதல். 
  1. பொங்கல் போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க கோருதல். 
  1. கிராம உதவியாளர்களுக்கு ஓய்வு பெறுகின்றபோது 50% விழுக்காடு வழங்க கோருதல். 
  1. கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப கோருதல். 

  10.ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க கோருதல் சம்மந்தமாக 11.கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியார்கள் பதவி உயர்வில் சென்றவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கின்ற போது பணிபார்த்த காலத்தில் 50% விழுக்காடு மட்டும் பிடித்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது என்ற நிலையை மாற்றி 100% விழுக்காடு பணிகாலமாக எடுத்துக்கொண்டு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். 

     12.1.09.1995 முன்பு பணி பார்த்த காலத்தை பணி காலமாக கருதி ஓய்வு ஊதியம் வழங்கவேண்டும். 

  1. பதவி உயர்வு வருகின்றபோது வயதை கணக்கீடு செய்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். 
  1. கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர இதரபணிகளுக்கு பயன்படுத்த கூடாது.

        ஆகிய கோரிக்கைகள் தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டன.