அதிமுகவினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதீர்கள்!

அதிமுகவினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதீர்கள்!

 ஜி.சாந்தகுமார், 

 சமீபத்தில் எடப்பாடி பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. ஒருமுறை டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் என யாரை சந்திக்கவும் அனுமதி கிடைக்காமல் சென்னை திரும்பினார். சமீபத்தில் டெல்லி சென்ற போது அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை பார்க்க முடியாமல் திரும்பி வந்தார்.

   பிரதமர் மோடி ஏன் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்பது குறித்து ஒரு ரூட்டை ஓபிஎஸ் ஆதரவாளாரான பெங்களூர் புகழேந்தி கூறியுள்ளார்.

   செய்தியாளர்களிடையே பேசிய பெங்களூர் புகழேந்தி, "எடப்பாடி பழனிசாமி ஒரு ஊழல்வாதி , அவர் தொடர்ந்து ஊழல் வழக்கை சந்தித்து வருகிறார் என்ற காரணத்தினால் தான் பிரதமர் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து வருகிறார்.

   ரூ.4,500 கோடிக்கான ஊழல் வழக்கை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வருகிறார். மற்றும் கொடநாடு கொலை வழக்கு என இப்படி பல வழக்குகளில் சிக்கியுள்ளார். எனவே விரைவில் அவர் மீது வழக்கு பதிவாகி சிறைக்குச் செல்வார். இதனால் அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை உருவாகும். அதிமுகவினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதீர்கள்” என்றார்.