மகேந்திரவாடி ஏரி நிரம்பியது சட்டமன்ற உறுப்பினர் மலர் தூவினார்!

கு.அசோக்,
மகேந்திரவாடி ஏரி நிரம்பியது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மகிழ்ந்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்,மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி கடைவாசல் செல்கிறது.இதனை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் ஏரியின் கடைவாசல் தண்ணீர் மலர்தூவி வரவேற்றார்.
ஏரியின் கொள்ளவு, ஏரிகரையின் உறுதி தன்மை , கடைவாசல் வழியாக எத்தனை கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என கேட்டறிந்தார்.
கடைவாசல் பகுதியில் குளிக்கவோ,செல்ஃபி எடுக்கவோ,துணிவைப்பது தவிர்க்க தடுப்பு அமைக்க வேண்டும், பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அலுவலர்கள் சேரலாதன், மெய்யழகன், செங்கல் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் , நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ரவி மற்றும் சோளிங்கர் நெமிலி ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.