தி.மு.க., கவுன்சிலர் மீது பொய் வழக்கு! வீடு புகுந்து அரவாணிகள் அராஜகம்!
ஜி.கே.சேகரன்,
வீட்டு பிரச்சனை ஒன்று தொடர்பாக வாசுதேவன் என்பவர் அரவாணிகள் மற்றும் கூலிப்படையினரை அழைத்து வந்து அங்கு வசிப்பவர்களை கலாட்டா செய்திருக்கிறார்கள்.
வேலூர் மாமன்றத்தின் 27 ஆவது வார்டு கவுன்சிலரின் பெயர் ஜெ.சதீஷ்குமார். இவர் திமுகவைச் சேர்ந்தவர், அவரது தந்தை ஜெய்சங்கர் (எ) பாச்சி அ.தி.மு.க.பிரமுகர் ஆவார்.
இந்நிலையில் கவுன்சிலர் சதீஷ்குமார் உள்ளிட்ட அவர்கள் உறவினர் ஏழு பேர் மீது சத்துவாச்சாரி போலிசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இது பொய் வழக்கு என்றும் போலிசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றி கூறப்படுவதாவது:-
வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரி பகுதி இரண்டில் உள்ள 63 வது சாலையில் ஒரு கலாட்டா சம்பவம் நடந்துள்ளது. அரவாணிகள் சிலரும், கூலிப்படையினரும் ஒரு வீட்டுக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட அந்த வீட்டில் திமுக கவுன்சிலர் சதீஷ்குமாரின் உறவினர்கள் வசித்து வருகிறன்றனர்.
இந்த வீட்டை சென்னை நுங்கம்பாக்கம் கிளை இந்தியன் வங்கியில் கனிமொழி என்பவர் ஏலம் எடுத்துள்ள நிலையில், வாசுதேவன் என்பவர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. (வில்லங்கம் சான்றில் வாசுதேவன் பெயரே இடம் பெறவில்லை).
இந்நிலையில் மேற்படி வீட்டில் அரவாணிகள் புகுந்து, அந்த வீடில் இருந்தவர்களை வெளியேற்றி வீட்டை காலி செய்ய முயன்றுள்ளனர். இந்த ஏற்பாட்டை வாசுதேவன் தான் செய்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி பத்திரிகைகளில் விளம்பர பணியாளராக பணியாற்றி வந்த வாசுதேவன் காவல் துறையில் தமக்குள்ள செல்வாக்கை தவறாக பயன்படுத்தி மேற்படி ஏழு பேர் மீது பொய் வழக்கு பதிய செய்திருக்கிறார்.
இந்நிலையில் காவல் துறையினரின் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து தனது குடும்பத்தினரை வெளியேற்ற முயற்சிப்பதாகவும், வீட்டை அபகரிக்க முயல்வதாகவும் கவுன்சிலர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் எங்கள் ஏழு பேர் மீது வழக்குபதிவு செய்து, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார், அதற்காக அவர் காவல்துறையினர் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தியுள்ளார் என்கிறது கவுன்சிலர் தரப்பு.
இந்நிலையில் கவுன்சிலர் சதீஷ்குமாரின் தந்தை ஜெய்சங்கர் (எ)பாச்சி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழகத்தில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஒரு சில தவறுகள் நடந்துள்ளது.
எங்களது உறவினரின் வீட்டுக்குள் அரவாணிகளும், ஓல்டு டவுன் மற்றும் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளும் அத்து மீறி நுழைந்து அராஜம் செய்துள்ளனர். வீட்டுக்குள் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதும், பின்பக்கம் சென்று கைத்தட்டி கூச்சல் எழுப்பியும் உள்ளனர். இதெல்லாம் பட்டப்பகலில் நடந்துள்ளது.
வாசுதேவன் என்பவர் தான் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார். இதை நாங்கள் போலிசாரிடம் சொல்லியிருக்கிறோம். இது சம்மந்தமான சி.சி.டி.வி. காட்சிகளை போலிசுக்கு கொடுத்துள்ளோம்.
பேங்குல கடன் வாங்கிய வாசு தேவன் அதை கட்டாததால் வீடு மூழ்கிவிட்டது. பின்னர் ஏலத்துக்கு வந்த வீட்டை பணம் செலுத்தி எடுத்தவர்கள் அங்கு வசிக்கிறார்கள். அப்படியிருக்க காவல் துறை அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்த வாசுதேவன், அவர்களை காலி செய்து, சட்டத்துக்கு புறம்பாக வீட்டை அபகரிக்க இந்த அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றார்.
வாசுதேவன் ஏற்கனவே இது போல ஒரு வீட்டை ஆட்டையை போன முயன்றதாக கூறப்படுகிறது.
குறிப்பு:- அரவாணிகளின் அராஜகம் வேலூர் மாநகரில் ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக தனியார் மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் இவர்கள் பொது மக்களிடமிருந்து பணம் பறிக்கிறார்கள். கூலிப்படையாகவும் இயங்குகிறார்கள், சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் ஏமாற்றி அபரித்த நிலையில், அவரால் நன்கு கவனிக்கப்பட்டனர். ஆயினும் போலிசார் அவர்களை அடக்கிவைக்க வேண்டும் என்பது பொது மக்களின் அவா.