மாற்றுத்திறனாளிகளுகாக சேவை செய்பவர்கள் கால்களை தொட்டு வணங்க வேண்டும்:-அமைச்சர் ஆர்.காந்தி உருக்கம்!

ஜி.கே.சேகரன்,
இராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சம் 56 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுகாக சேவை செய்யும் மனிதர்களின் கால்களை தொட்டு வணங்க வேண்டும் என கண்ணீர் விட்டு பேசிய அமைச்சர் ஆர்.காந்தி.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துக் கொண்டு 477 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசி, மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து மாநிலத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பணியாளர்கள் சேவை மகத்தானது. அவர்களின் பாதம் தொட்டு வணங்க வேண்டுமென அமைச்சர் காந்தி கண்ணீர் மல்க தெரிவித்த அவர் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அவைகளை துண்டு சீட்டில் எழுதி அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து அனுப்பினால் கூட உங்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும் என அமைச்சர் பேசினார்.