பா.ஜ.க. வின் வருமான வரித்துறை ரைடு மிரட்டல் கர்நாடகா தேர்தலில் பலிக்காது!

கு.அசோக்,
பாஜக வின் வருமான வரித்துறை ரைடு என்கிற மிரட்டல் கர்நாடகா தேர்தலில் பலிக்காது என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் முகுந்தராயபுரம் பாரத மிகுமின் நிறுவன தொழிலாளர்களை சந்தித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்னுபிரசாத் பேட்டி.
இராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பிஎபி மற்றும் ஐயூடிசி தொழிற்சங்கம் முதன்மை தொழிற்சங்கமாக அறிவிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து அதன் அலுவலத்தின் சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக பங்கேற்ற ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் அலுவலகத்தில் வெளியே இருக்கும் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தெரிவிக்கையில், 60 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விற்கப்பட்டு வருவதை காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டிப்பதோடு எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறோம்.
பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் காங்கிரஸ் ஆட்சி பெரும் பங்களிப்பை வழங்கியதாகவும் தற்போது பாஜக ஆட்சி போது புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனங்கள் கூட தொடங்கப்படவில்லை எனவும் அதற்கு மாறாக நல்ல லாபம் ஈட்டி வரும் நிறுவனங்கள் கூட நஷ்டம் அடைய செய்து அதனை தனியார் மயமாக்கும் போக்கினை பாஜக அரசு செய்து வருவதாக கூறினார்.
மேலும் கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியானது பிரகாசமாக இருப்பதாகவும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொற்கால ஆட்சி கர்நாடகாவில் அமைக்க இருப்பதாகவும், பாஜக கட்சியின் பலம் என்பது மக்களை நம்பி இல்லை எனவும் இ,டி இன்கம் டேக்ஸ் சிபிஐ போன்ற நிறுவனங்களை சார்ந்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு நல்லது செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று அதன் மூலம் வாக்கினை பெற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இ,டி இன்கம் டேக்ஸ் போன்ற ரைடுகளை நடத்தி அதன் மூலம் பயமுறுத்தி மட்டுமே ஆட்சியை அமைக்க முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் இந்த முறை பாஜக மிரட்டல் கர்நாடகா தேர்தலில் பலிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் தெரிவித்தார்.