திமுகவுடன் தான் கூட்டணி:-அடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

திமுகவுடன் தான் கூட்டணி:-அடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

க.பாலகுரு,

 பாஜக அரசை எதிர்த்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் பேட்டி.

 திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது.

  தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் மதவெறியை தூண்டி விடுவதும், இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பு அரசியலை ஏற்படுத்துவதும் மிகவும் ஆபத்தானது.

  பிரதம மந்திரியே இவ்வாறு செய்தால் நாட்டில் யாருக்கு பாதுகாப்பு இருக்கும்? மதச்சார்பின்மையை எவ்வாறு பாதுகாக்க முடியும்.?

   எனவே இத்தகைய சக்திகளை எதிர்த்து மத சார்பற்ற இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

  மேலும் தமிழகத்தில் சாதிய வன்முறைகளை அழிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம் முறையாக செலவிடப்படவில்லை அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் மத்தியில் உர பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

  உரங்களின் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் உள்ளது. விவசாயிகளுக்கான உரம் கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அரசு கரும்பு கொள்முதல் செய்யாதது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 உடனடியாக கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். சென்ற ஆண்டு போல கரும்பை சேர்த்து பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக அரசை எதிர்த்து திமுகவுடன் கூட்டணி தொடரும் என கூறினார்.