கிறிஸ்தவ பாதிரியார்களை குறிவைக்கும் பா.ஜ.க.!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கேராளாவில் உள்ள சில கிறிஸ்தவ பாதிரியார்களை பா.ஜ.க தட்டித்தூக்க குறிவைத்திருக்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேராளாவில் சில பல இடங்களில் ஜெயிக்க பா.ஜ.க. முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கேரளாவில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியே இருப்பதால் பா.ஜ.க அதை குறிவைத்து தேர்தல் பணிகளை துவக்கியிருக்கிறது.
அதன் முதல்படியாக கடந்த ஞாயிறு அன்று கொண்டாடப்பட்ட ஈஸ்டர் பண்டிகையின்போது அவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்ததுடன், ஆயர்கள், பாதிரியார்களையும் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க. வை குறித்து ஒரு சில கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் கேரளாவில் பா.ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று கத்தோலிக்க பேராயர் ஒருவர் அண்மையில் கூறி இருந்தார்.
அந்த வரிசையில், தற்போது ஆர்த்தோடக்ஸ் தேவாலய ஆயர் கீவர்க்கீஸ், பா.ஜ.க. கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சர்வதேச அளவில் சிலர் தவறான பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள்.
இது இந்தியாவை அவமதிப்பது போல் உள்ளது. இந்தியா மிகப்பெரிய நாடு. ஆங்காங்கே மனக்கசப்பை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறலாம். அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
அவர் அதற்கும் ஒருபடி மேலே போய் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டையும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சில் பல நல்ல விசயங்கள் உள்ளன. உடற்பயிற்சி என்பது தற்காப்புக்காக மேற்கொள்வது ஆகும். மேலும், பா.ஜ.க.ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கேரளாவில் கத்தோலிக்க ஆயர்கள் பா.ஜ.க.வுக்கு அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தை நோக்க வைத்திருக்கிறது.