அம்மா இறந்த பிறகு நீ 5000 கோடி கல்லா கட்டிட்ட அன்பழகா! முன்னாள் அமைச்சரை பார்த்து கேள்வி-அடிதடி ரகளை!

அம்மா இறந்த பிறகு நீ 5000 கோடி கல்லா கட்டிட்ட அன்பழகா! முன்னாள் அமைச்சரை பார்த்து கேள்வி-அடிதடி ரகளை!

 ப.சீனிவாசன்,

  அம்மா இறந்த பிறகு நீ 5000 கோடி கல்லா கட்டிட்ட அன்பழகா என்று முன்னாள் அமைச்சரை பார்த்து கேள்வி கேட்டதால்-அடிதடி ரகளை ஏற்பட்டது.

 கடந்த மாதம் 20-ஆம் தேதி அதிமுக கட்சி அலுவலகத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கே.பி.அன்பழனுக்கும் டி.ஆர்.அன்பழனுக்கும் ஏற்பட்ட வார்த்தை மோதலில் கே.பி.அன்பழகனை டி.ஆர்.அன்பழகன் தாக்கியதாக தகவல் வெளியானது.

  இது குறித்து கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்"திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் வழக்கமாக அதிமுக கூட்டங்களில் 2 அல்லது 3-வது வரிசையில் அமர்வது வழக்கம். ஆனால் அன்று கே.பி.அன்பழகன் முல்வைவேந்தனை அருகே உட்கார வைத்துக்கொண்டார்.

   அப்போது அங்கிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் இதனை பார்த்து ஆவேசமடைந்து கட்சிக்கு உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு நேற்று கட்சிக்கு வந்தவருக்கு முக்கியத்துவமா என கேள்வியெழுப்பினார்.

 அதற்கு கே.பி.அன்பழகன் எல்லாரும் கட்சிக்காக உழைத்துவர்கள் தான். கட்சியில் யார் செயல்படுகிறார்களோ அவர்கள் தான் கட்சி என கூறினார். இதனால் கே.பி.அன்பழகனுக்கும், சிங்காரத்திற்கும் வாக்குவதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஜெ.பேரவை முன்னாள் செயலாளர் டி.ஆர்.அன்பழகன் சிங்காரத்திற்கு ஆதரவாக கே.பி.அன்பழகனை பார்த்து ஆமா நீ கட்சிக்கு உழைச்சவனுக்கு எங்க மதிப்பு கொடுக்கிற என்னை ஏன் பொதுகுழுவிற்கு அழைத்துச் செல்லவில்லை?, பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. சீட் வாங்கித்தரவில்லை? என்று பொங்கினார்.

பதிலுக்கு கே.பி.அன்பழகன் நான் சீட் ஒதுக்கும் கமிட்டிலியே இல்லை. நான் எப்படி உனக்கு சீட் வாங்கி தர முடியும் சீட் ஒதுக்கும் கமிட்டியில உனக்கு வேண்டப்பட்ட கே.பி.முனுசாமி தான் இருக்காரு அவர் தான் உனக்கு சீட்டுக்கு பொறுப்பு.

   நீ ஏன் சீட்டு வாங்கிகொடுக்கவில்லை என கே.பி.முனுசாமியிடம் போய் கேளு என பேச வார்த்தைகள் முற்றியது. இதனால் கே.பி.அன்பழகன் மேடையிலிருந்து எழுந்து நேராக தனது மாவட்ட செயலாளர் நாற்காலியில் போய் அமர்ந்துக் கொண்டார்.

   அதனைத் தொடர்ந்து கே.பி.அன்பழகனை பார்த்து டி.ஆர்.அன்பழகன் ”நீ ஒருத்தன் மட்டும் கட்சிக்கு பாடுபட்டாயா? எல்லோரும் தான் உழைத்தோம் ஆனால் எல்லாவற்றையும் நீயே எடுத்து செல்ல பார்க்கிறாய். அம்மா இறந்த பிறகு நீ 5000 கோடி கல்லா கட்டிட்ட நீ கட்சிக்காக என்னாடா உழைத்த நீயேல்லாம் ஒரு ஆளு” என ஒருமையில் பேசினார்.

  அப்போது அங்கிருந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து அநாகரீகமாக பேசாதே மரியாதையாக பேசு என டி.ஆர்.அன்பழகனை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

  அப்போது டி.ஆர்.அன்பழகன் கோவிந்தசாமியை பார்த்து டேய் நீ எல்லாம் பேசக்கூடாது மாவட்ட செயலாளர் பதில் சொல்லட்டும் என கூறியதையடுத்து. மீண்டும் கே.பி.அன்பழகனை பார்த்து உனக்கு 200 கோடி சம்பாதிக்க வாய்ப்பு கொடுத்தேன் ஆனால் நீ பென்னாகரம் அதிமுகவினருக்கு என்னத்த செய்தாய் என மீண்டும் ஒருமையில் பேசினார்.

 ஒரு கட்டத்தில் வாய் வார்த்தை முற்றிய பிறகு கே.பி.அன்பழகனும், டி.ஆர்.அன்பழகனும் ஒருவருக்கு ஒருவர் சட்டையை பிடித்துக்கொண்டு சண்டையிட்டனர். அப்போது டி.ஆர்.அன்பழகன் கே.பி.அன்ழகனை அடித்துவிட்டார். இதில் நிலைதடுமாறிய கே.பி.அன்பழகன் கீழே விழுந்தார்.

 இதனையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் இருவரையும் விலக்கி விட்டனர். ஆனால் டி.ஆர்.அன்பழகன் நான் உன்னை சும்மா விடமாட்டேன் என மீண்டும் கே.பி.அன்பழகனை பார்த்து ஒருமையில் பேசினார். பின்னர் அங்கிருந்த கட்சியினர் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாக டி.ஆர்.அன்பழகனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

 இதற்கு கே.பி.அன்பழகன் அவனை நீக்க வேண்டும் என்றால் நீங்கள் பரிந்துரை கடிதம் கொடுக்க வேண்டும் என கூறினார். பின்னர் கடிதத்தை வாங்கினார். இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் கட்சிக்கு அவப்பெயர் என்று கூறி கே.பி.அன்பழகன் தரப்பை சமாதானம் செய்துள்ளார்.

 இருப்பினும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் அன்பு.

குறிப்பு:-  ஏற்கனவே டி.ஆர்.அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அதிமுகவில் இருந்த போது அவரை கை நீட்டி பேசி ரகளை செய்தார்.  அப்படியிருக்க தற்போது கே.பி.அன்பழகன் மீதே கை வைத்துள்ளார். ஆகவே அவரை கட்டம் கட்ட பரிந்துரைக்கப்பட்டதாக. ஆனால் அவர் ஓ.பி.எஸ்.கூடாரத்துக்கு தாவிவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று எடப்பாடி அறிவுறுத்தி மேட்டரை பெண்டிங் வைத்துள்ளாராம்.

அது சரி,