சசிகலாவுக்கும் ஒற்றை தலைமைதான் பிடிக்குமாம்! விரைவில் ஓ.பி.எஸ்ஸிடன் சந்திப்பு!!
ஜி.சாந்தகுமார்,
ஓபிஎஸ்...சசிகலா இருதரப்பும் பழைய பகையை மறந்து சமாதானம் பேசி வருவதாக கூறப்படும் நிலையில்,அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை நிச்சயமாக வரும் என சசிகலா கூறியுள்ளார்.
தாம் ஓதுக்கப்படுவதை உணர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சசியின் இந்த பேச்சு ஓ.பி.எஸ்.தரப்பில் சற்று குழப்பமாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வலிமையைக் காட்ட வேண்டும் என்றால் சசிகலாவின் ஆதரவு தனக்கு உதவும் என ஓபிஎஸ் யோசித்துள்ளார். இந்நிலையில் சின்னம்மாவும் ஒற்றை தலைமையை பற்றி பேசுகிறாரே என்பதே அந்த குழப்பத்தின் மையம்.
ஆம், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுடன் ஓபிஎஸ் ஏற்கனவே பேசி வருவதாகவும், விரைவில் சசிகலாவை சந்தித்துப் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.
சசிகலாவுடன் ஆதரவு கரம் கோர்ப்பதன் மூலம் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுவிடலாம் என முயற்சி செய்து வருகிறார் ஓபிஎஸ்.
ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயண திட்டத்தை தொடங்கி இருக்கும் அதே நேரத்தில்ல், சசிகலாவும் சென்னையில் இருந்து தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இருவருமே அதிமுகவில் தங்களுடைய இருப்பை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருப்பதால், இரண்டு பேரின் சந்திப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ இந்தம்மாவே பொதுச்செயலாளராக இருக்க வேண்டுமானால் அதுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றுதானே கேட்ப்பாங்க.?