அறிவிப்பு அதிமுகவுடையது- நடைமுறை எங்களுடையது!அமைச்சர் துரைமுருகன் பேட்டி!!

ஜி.கே.சேகரன்,
அதிமுக அரசு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அறிவித்ததுடன் சரி, தற்போதைய அரசு நிலங்களை கையகப்படுத்தியதுடன் அதற்குரிய பணிகளை மேற்கொண்டுள்ளோம். திட்டங்கள் துவங்குவதை அவசரப்படுத்தமாட்டோம் - அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் பேட்டி
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.அவர்கள் மாலை அணிவித்தார்.
சிலையில் அருகே உள்ள அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதே போன்று மக்கான் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் ஆசிரியர் கழக மாநில துணை செயலாளர் ராமமூர்த்தி,அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அப்பு பாஜக சார்பில் கார்த்தியாயினி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அத்திகடவு அவிநாசி திட்டம் அதிமுக அரசு அறிவித்ததுடன் சரி திட்டங்களை முழுமையாக அவர்கள் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அத்திகடவு அவிநாசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அவர்கள் அறிவித்ததுடன் சரி ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல இடங்களில் தனியார் இடங்களை கையப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் நாங்கள் இந்த திட்டத்தை அவசரப்பட்டு செய்யமாட்டோம் முழுமையாக முடித்த பின்னர் தான் திறப்போம் என்று கூறினார்.