குடியரசு தின கொண்டாட்டத்தில் ஊடக உரிமை குரல் சங்கம்!!

வ.வேல்,
73வதுகுடியரசுதினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட்சார்பில்கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெமிலா அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணா மூர்த்தி முன்னிலை வகித்தார். நிலவொளி டிரஸ்ட்டின் தலைவர் புனிதவதி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்,ஜனநேசன் பத்திரிகை ஆசிரியருமான வி.எஸ்.இராமன், ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளரும்,தென்னிலை கதிர் இதழின் ஆசிரியருமான வி.எம்.தமிழன் வடிவேல்,சிறு குறு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவரும்,மனசொலி இதழின் ஆசிரியருமான கா.குரு , காஞ்சி தலைவன் இதழின் ஆசிரியர் பிரஸ் குமார், திரைப்பட நடிகை ஸ்ரீ .பாரதி, நடிகரும் நிகழ் மீடியா ஆசிரியருமான ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் ஏழை எழியவர்களுக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டும் குடியரசு தின விழாவை கொண்டாடினர்.இதில் தொழில் அதிபர்கள் ஆவடி தணா, குமரேசன், மஞ்சுளா வெள்ளைசாமி, பத்திரிகையாளர் பாலாஜி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ரகுநாதன், வார்டு உறுப்பினர் முருகன், பூபாலன், ஜீவா, நிலவொளி டிரஸ்டின் நிர்வாகிகள் கோபால் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு குடியரசு தினவிழாவை சிறப்பித்தனர்.