போலிசைவிட எனக்குத்தான் பவர் ஜாஸ்த்தி?ஆரணியை அரட்டும் வருவாய் துறை பிசி!

முருகன்.
திருவண்ணமலை மாவட்டம் ஆரணியிலுள்ள வருவாய் அலுவலகம் ஒன்றில் அகமது என்பவர் தனி கிளார்க் எனப்படும் பிசி ஆக பணிபுரிகிறார். அவர் மீது பல்வேறு தரப்பினர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கெல்லாம் அகமது பாய் அசருவதில்லையாம். ஏனென்றால் ஏற்கனவே அவரை இது தொடர்பாக இரண்டு முறை பணியிடமாற்றம் செய்திருக்கிறார்களாம்.
அப்படியா என்று வாய் பிளக்கும் சிலர், இது குறித்து விசாரித்தனராம். மேற்படி அகமது வருவாய் அலுவலர் அவர்களின் பெயரை சொல்லி லாரி உரிமையாளர்களிடம் பணம் பெறுகிறாராம்.
ரப்பீஸ் லோடு கொண்டு வந்தால் லோடுக்கு பத்தாயிரம், மேலும் அனுமதி பெற்று மணல், கல் போன்றவற்றை எடுத்துச் செல்பவர்களின் லாரியை பிடித்து நிறுத்திக் கொண்டு வியாபாரம் பேசிவருகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் புகார் சொன்ன பின்னரும், அவரது உத்தரவை அகமது பாய் கண்டு கொள்வதேயில்லையாம்.
அதே போல் மணல் கடத்தல் வாகனங்களை ரிலீஸ் செய்ய கோர்ட் ஆர்டர் உள்ளாது என்று அவரை நாடும் போலிசாரை, மேற்படி பிசி சகட்டு மேனிக்கு வசை பாடி யோவ் போலிசைவிட எனக்குத்தான் பவர் ஜாஸ்த்தி போயா எல்லாம் எனக்கு தெரியும் என்று பந்தா காட்டுகிறாராம்.
ஆனால் இந்த அகமது பாயின் லஞ்ச லாவண்யம் மற்றும் பந்தா ஆகியவை பற்றி கோட்ட அலுவலருக்கு தெரியாது.
ஆனாலும் உயர் அலுவலர்களின் பெயரைச் சொல்லித்தான் பாய் கட்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக தகவல்.
மேற்படி கட்டிங் பார்ட்டி மீது லஞ்ச ஒழிப்பு துறை கண் வைத்தால் நலம்.