பட்டாசு பெட்டியில் தீப்பற்றி வெடித்து 2 பேர் படுகாயம்!

பட்டாசு பெட்டியில் தீப்பற்றி வெடித்து 2 பேர் படுகாயம்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை அடுத்த வானாபாடி பெரிய தெருவை சேர்ந்தவர்  தனபால்-65 இவர் அதே  பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

 இந்த நிலையில் இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கோபி-46 மற்றும் தீபா-40 ஆகிய  இருவரும் தனபால் மளிகை கடைக்கு வந்துள்ளனர்.

 அப்போது தனபாலின் பேரன் பிரஜாத் வைபவ் வயது-10 கடையின் பக்கத்தில் உள்ள அவரது வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக்கொண்டு விளையாடியதாக கூறப்படுகிறது.

 அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவன் சங்கு சக்கர வெடியை பற்ற வைத்தவாறு சங்கு சக்கரம் சுத்திக் கொண்டிருந்தபோது நெருப்பு தீயானது கடையின் அருகே இருந்த பட்டாசு அட்டை பெட்டியில் விழுந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து பட்டாசு அட்டைப்பெட்டியில் இருந்து அனைத்து வெடி பட்டாசுகளும் படபடவென வெடிக்க தொடங்கியுள்ளது இந்த பட்டாசு வெடி விபத்தில் கடையில் இருந்த கோபி மற்றும் தீபா ஆகிய இருவரும் பட்டாசு வெடி தீயினால் பலத்த காயமடைந்துள்ளனர்

 இதனை தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தீபா மற்றும் கோபியை விட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் கோபிக்கு 75% தீ காயமும் தீபாவிற்கு 50% சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் சிம்சி  மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்

 தற்போது இச்சம்பவம் அறிந்து வந்த சிப்காட் போலீசார்  பட்டாசு வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.