பெண்ணின் தலை துண்டிப்பு! பசுபதி பாண்டியன் பேனர் கீழ் வீச்சு! தென் மாவட்ட பதற்றம்!!

ம.பா.கெஜராஜ்,
நிர்மலா தேவி என்பவரின் தலையை வெட்டி நந்தவன பட்டியில், பசுபதி பாண்டியன் வீட்ட்டுக்கு முன்பு உள்ள அவரது பேனரின் கீழ் வீசிவிட்டு சென்ற சம்பவம் தென் மாவட்டங்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள அலங்கா ரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுப திபாண்டியன். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கும் , தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் பண் ணையார் கோஷ்டிக்கும் இடையே நீண்டநாள்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவரை மற்றொரு கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
பின்னர், வெங்கடேஷ் பண்ணை யார் போலீஸாரால் சுடப்பட்டு இறந்தார் . எனினும் , அவரது தம்பி சுபாஷ் பண் ணையாருக்கும் , பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் பசுபதிபாண்டியனும், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் கடந்த 2006 - ம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதியில் ஒரு பாலத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது , பசுபதி பாண்டியனின் எதிரிகள் வீசிய வெடிகுண்டால் பலத்த காயமடைந்த ஜெசிந்தா பாண்டியன் இறந்தார்.
பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருந்தவர் பசுபதிபாண்டியன். பின்னர் அக்கட்சியை விட்டு பேராசிரியர் தீரன் வெளியேறி ' தமிழர் அரசு ' என்ற தனிக் கட்சியை தொடங்கினார்.
அக்கட் சிக்கு பசுபதிபாண்டியன் தலைவராக இருந்து வந்தார். எனினும் அக்கட்சி தீவிரமாகச் செயல்படவில்லை . இந்நிலையில் , கடந்த 2011 ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திரு நெல்வேலி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார் பசுபதிபாண்டியன்.
அந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்ற அவர் , தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் தான் அவர் 2012 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு பழிப்பழியாக தற்போது நிர்மலா தேவி என்பவரை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.
இரு தரப்புக்கும் இடையேயான பழிக்கு பழி கொலைகள் 25 ஆண்டுகளாக நீண்டு இன்று திண்டுக்கல் நிர்மலா வரை வந்துள்ளது.
மேற்படி கொல்லப்பட்ட நிர்மலா தேவி, பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.
நிர்மலா, பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வீடு எடுத்து தங்க உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருதரப்புக்குமான 25 ஆண்டுகால பழிக்குப் பழி சம்பவம் சிலுவைப்பட்டி மைக்கேல் முதல் திண்டுக்கல் நிர்மலா வரை உயிர் பலி வாங்கியுள்ளது.
இதில், நிர்மலாவின் தலையை வெட்டி எடுத்து திண்டுக்கல் நந்தவனப்படி பசுபதி பாண்டியன் வீட்டு முன்னர் உள்ள பசுபதி பாண்டியனின் பேனரின் கீழ் வீசிவிட்டு போயிருக்கிறார்கள்.
அதாவது பசுபதி பாண்டியனை காட்டிக் கொடுத்ததால் பழிக்கு பழிவாங்கிவிட்டோம் என கொலையாளிகள் அறிவிக்கிறார்களாம்.
இந்த கொலையை தொடர்ந்து டிஜஜி.விஜயகுமாரி தலைமையிலான போலிஸ்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
இன்னும் ஓரிரு நாட்களில் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் வரவுள்ள நிலையில் நிர்மலா தேவியின் கொலை தென் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.