மனைவிகள் விற்பனை! நூதன விபச்சாரத்தில் பணம் குவிப்பு!

ம.பா.கெஜராஜ்,
சமூக நிகழ்ச்சி என்கிற பெயரில் குழுவாக இணையும் சிலர் தங்கள் மனைவிகளை விற்பனை செய்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சோஷியல் மீடியாக்களில் அறிமுகமாகும் நபர்களை குறிவைத்து தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்துள்ளார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் பெற்றுள்ளார்.
இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் அந்த வாலிபர் தனது மனைவியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று, அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினாராம்.
ஆனால் அந்த பெண் மறுத்ததுடன் கோபத்துடன் வெளியேறி கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்துவிட்டார்.
புகாரின் தன்மையை அறிந்த போலிசார் அதிர்ந்து போனார்கள்.
உடனே புகார்தாரரின் கணவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த வாலிபர் அளித்த விவரங்கள் போலீசாரை மிரள வைத்திருக்கிறது.
நாங்கள் சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார்கள்.
வாரத்திற்கு மூன்று நாள் ஏதாவது ஒரு நண்பர்கள் வீட்டில் குடும்ப விழா என்ற பெயரில் விருந்து ஏற்பாடு செய்வோம் அப்போது அந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான நண்பர்களை அழைப்ப்போம்.
அந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேல் நண்பர்கள் கலந்து கொள்வார்கள். அங்கு நண்பர்களுக்கு மது,பிரியாணி என அனைத்து வகைகளையும் ஏற்பாடு செய்வோம். அப்போது அங்கு நாங்கள் அழைத்துச் சென்றுள்ள எங்களது மனைவிகளை அந்த நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் பெறுவோம்.
இது போன்ற நிகழ்ச்சிகள் ஓட்டல், லாட்ஜ் என்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்போம்.
இதன் மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. அதன் மூலம் நாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என அந்த வாலிபர் போலீசில் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வாலிபரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்களும், பலான படங்களும் இருப்பது தெரியவந்தது.
போலிஸ் தரப்பில் கூறுகையில், கேரளாவில் 'ஜோடி யை மாற்றி கொள்ளும் வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர்.
சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த குரூப்பில் அங்கத்தினர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனையை தொடர்ந்து ஏழு வாலிபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம் என்கிறார்கள்.