இதுதாங்க தெற்கு காவல் நிலையம்!
ஜி.கே.சேகரன்,
செல்வ கணேசர் ஆலயத்தின் பூட்டை உடைத்து விநாயகரின் வெள்ளிக்கவசம் மற்றும் உண்டியல் பணம் திருட்டு
வேலூர்மாவட்டம்,வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை அருகில் கொசப்பேட்டை ஸ்ரீ செல்வ கணேசர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு வழக்கம் போல் ஆலயத்தை மூடிவிட்டு சென்றனர்.
ஆனால் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மர்ம நபர்கள் யாரோ ஆலயத்தின் பூட்டை உடைத்து ஆலயத்தினுள் சென்று விநாயகருக்கு அணிவிப்பதற்காக உள்ள வெள்ளிக்கவசம் மற்றும் உண்டியல் பணங்களை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஆலய நிர்வாகிகளும் அப்பகுதி மக்களும் வேலூர் தெற்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து விசாரணை செய்யவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.