மது பாட்டில்களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அழித்த மதுவிலக்கு போலிசார்!

மது பாட்டில்களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அழித்த மதுவிலக்கு போலிசார்!

 ஜி.குலசேகரன்,

 பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்திவரப்பட்ட மது பாட்டில்களை, திருப்பத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

   இந்த மது பாட்டில்கள் வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் கள்ளத்தனமாக  விற்பனை செய்தபோது பறிமுதல் செய்தவையாகும்.

  இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில்  சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான 7400 மது பாட்டில்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நசுக்கி அழித்தனர்.

  இதில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் மதுவிலக்கு அமலாக்க தாசில்தார் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.