அமெரிக்காவில் பெண்கள் வேலைவாய்ப்பு பெற டி,கே.எம் கல்லூரியில் இலவச பயிற்சி!

அமெரிக்காவில் பெண்கள் வேலைவாய்ப்பு பெற டி,கே.எம் கல்லூரியில் இலவச பயிற்சி!

  கு.அசோக்,

பெண்கள் சுய அதிகாரத்துடன் வேலைவாய்ப்பு பெறுவது குறித்து வேலூர் டி.கே.எம்.கல்லூரியில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு, தனியார் நிறுனத்தால் அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

வேலூ மாவட்டம்,வேலூரில் உள்ள டி,கே.எம் கல்லூரியும், தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான எக்ஸ்டியான் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் இணைந்து  "பரிவர்த்தனம்" என்ற பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.

  இவ்விழாவில் டி,கே,எம் கல்லூரியின் முதல்வர் பானுமதி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் நிறைந்த ஃபினிஷிங் ஸ்கூல் பயிற்சியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பி.எஸ்.சி. (மைக்ரோபயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி) படித்து வரும் மாணவிகளுக்கு 6 வாரகாலம் நடக்கும் இப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.

   இந்த திட்டம் குறித்து எக்ஸ்டியான் சொல்யூஷன்ஸ் நிறுவனனர் எல்.எம்.ராம், குறூகையில் பெண்களை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் முயற்சிகளை எக்ஸ்டியான் நிறுவனம் ஆதரித்தும், ஊக்குவித்தும் வந்திருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காக டி.கே.எம். மகளிர் கல்லூரியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

 எங்கள் நிறுவனத்தின் வேலூர் கிளை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 71% பேர் பெண்கள், 29% பேர் ஆண்கள். எனவே, சுகாதாரத்தொழில் துறையில் பெண்களின் தேவையை நாங்கள் உணர்ந்திருப்பதால், அத்துறையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்." மாணவிகளின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதோடு, நம்பிக்கை அளிக்கும் வகையில் வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்காவின் சுகாதாரத்தொழில் துறையின் தேவைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள பயிற்சிகளும் வழங்கப்படும்.

   இதன்மூலம் பெறுநிறுவன உலகத்தில் வேலை பெறுவதற்கான தகுதியை பெறும் வாய்ப்புமேடையாக இப்பயிற்சி அமையும். "ஃபினிஷிங் ஸ்கூல் பயிற்சியில் வழங்கப்படவுள்ளது என பேசினார்.

இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 6 வார காலம் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.