வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆர்பாட்டம்!

வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆர்பாட்டம்!

க.பாலகுரு

 திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திமுக தேர்தல் வாக்குறுதியின்படி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கக்கோரி நகர செயலாளர் அப்பாராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் படி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெற்ற அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிக்க கோரி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வமைப்பின் மாநில செயலாளர் குரு.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வீ.முனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.