வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்! 949.31 கோடி ஒதுக்கீடு!

கு.அசோக்,
வேலூர் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் மேயர் சுஜாதா சமர்ப்பித்தார் - மாநகராட்சியின் வருவாயை உயர்த்த பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு சுகாதாரம் மற்றும் குடிநீருக்கும் முன்னுரிமை.
வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை மேயர் சுனில், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட (ரூ.886.86 கோடி) யை விட கூடுதலாக ரூ.65.45 கோடி கூடுதலாக நிதியை சேர்த்து மொத்தம் ரூ.949.31 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மாநகராட்சி பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், மாநகராட்சி பள்ளிகளில் அதிக அளவு கழிவறையை கட்டுவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும்.
மேலும் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை கட்டுவது, புதியதாக 175 ஆழ்துளை கிணறுகளை அமைக்கப்படும்.
தெருவிளக்குகள் அமைக்கவும் புதியதாக 92 கிலோமீட்டர் சாலை அமைக்கவும் மழைநீரை சேமிக்க புதிய திட்டங்களை செயல்படுத்துவது மேலும் மாநகராட்சியின் வருவாய் உயர்த்த விடுபட்ட சொத்துகளுக்கு சொத்து வரி காலி மணை வரி தொழிற்வரி போன்றவற்றை உயர்த்துவதன் மூலம் வருவாயை மேம்படுத்த பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை விட கூடுதலாக பணிகள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.