அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

  ம.பா.கெஜராஜ்,

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இன்று முதல்  முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

 தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

 அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து கூறுகையில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.

  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் தாண்டவம் ஆடுகிறது" ஆகவே  மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.  என்று சொன்னார்.