வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் பள்ளிக்கு மூன்று நாட்களுக்கு லீவ்!

கு.அசோக்,
மழைநீர் வெள்ளம் அரசு உதவி பெறும் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்ததால் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், புதுப்பேட்டை ரோடு ரயில்வே தரைப்பாலம் அருகே அமைந்துள்ள டி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறைகளில் மழைநீர் வெல்லம் புகுந்ததால் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பக்கத்து கிராமங்களில் உள்ள மழை வெள்ளம் டி எம் எஸ் பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில் இருந்து வகுப்பறைக்குள் நுழைந்ததோடல்லாமல் பள்ளியை நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வெள்ளத்தின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் எங்கள் பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்து உள்ளது.
இதனால் மாணவர்களின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.