திருநங்கைகளின் பேஷன் ஷோ! ரசித்துப் பார்த்த ஆட்சியர்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை மூலம் சர்வதேச திருநங்கைகள் தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ..ஆ.ப.அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலத்துறை மூலம் சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு திருநங்கைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அதனைத் தொட்ர்ந்து திருநங்கைகள் சமையல் கோலம்,பாடல், பேஷன் ஷோ, நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும், புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று விழா பேருரையாற்றியதுடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 52 நபர்களுக்கு ரு.20.00 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் இ-ஷேரம் காப்பீடுகளும், சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ரு.16,14,559 மதிப்பீட்டில் 33 சிறு தொழில் செய்ய மானியம் மற்றும் 45 நபார்களுக்கு அடையாள அட்டையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அப்போது ஆட்சியர் குறிப்பிடுகையில் திருநங்கைகள் அனைவரையும் போல் எல்லாதுறைகளிலும் சாதித்து காட்ட வேண்டும் அரசும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளிக்கிறது அதன் மூலம் அவர்கள் பயனடைய வேண்டும்.
திருநங்கைகளும் அனைவருக்கும் சமமான ஆற்றல் படைத்தவர்கள் அவர்கள் தங்களின் சுய நிலையை உணர்ந்து அனைவரையும் போல் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் தமிழக அரசு திருநங்கைகள் தொழில் துவங்கி கடனுதவி வீடு கட்டி கொடுத்தல் மற்றும் அவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கின்றனர் இதன் மூலம் திருநங்கைகள் பயன்பெற வேண்டும் என்று பேசினார். இவ்விழாவில் டி.ஆர்.ஓ.ராமமூர்த்தி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளாச்சி முகமை திருமதி.க.ஆர்த்தி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திரு.நீ.செந்தில்குமரன், திட்ட அலுவலர் ஐ.சி.டி.எஸ். சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) திருமதி.ஏ.கோமதி, மாமன்ற உறுப்பினர் திருநங்கை கங்கா மற்றும் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழால் திருநங்கைகள் நடனம் ஆடியதை ஆட்சியரும், மற்ற அலுவலர்களும் ரசித்து பார்த்தனர்.
முன்னதாக வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பி.என் பாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உரக்கிடங்கு, தேனீ வளர்ப்பு பெட்டி, கால்நடை பராமரிப்பு போன்றவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்படியே, கே.வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் துறை திட்டங்கள் சார்ந்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நட்டு வைத்தார்.
மேலும், கே வி குப்பம் கிராமத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூபாய் இரண்டு லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்ட சிப்பம் கட்டும் அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். உடன் குடியாத்தம் கோட்டாட்சியர் திரு.தனஞ்செயன், குடியாத்தம் வட்டாட்சியர் சரண்யா, தோட்டக்கலை துணை இயக்குனர் திரு மோகன் ஆகியோர் இருந்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக விரிஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து பாலத்தின் மேல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்