டிரைவர்களை டார்ச்சர் செய்த தூங்கு மூஞ்சி ஆபிசர்!

ர.நி.ஆனந்தன்,
பேருந்து பணிமனையில் உறங்கிக் கொண்டிருக்கும் உதவி பொறியாளர்! வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவச் செய்த ஓட்டுநர்கள்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பேருந்து பணிமனையில் உதவி பொறியாளராக ரகுநந்தன் பணியாற்றி வருகிறார்.
இவர் பணி நேரத்தில் உறங்கிக் கொண்டு இருப்பதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்துகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இரவு நேரத்தில் வழிதடத்தில் இயங்க வேண்டிய பல பேருந்துகள் காலதாமதமாக இயக்கப்படுவதாகவும் ஓட்டுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இவர் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய பணி அறையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சென்றால் அவர்களை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்க வேண்டிய உரிய பேருந்துகள் கொடுக்காமல் பழைய பேருந்துகளை கொடுத்து வழித்தடத்தில் இயக்க கூறுவதும் என தொடர்ந்து ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் சக ஊழியர்கள் இவர் பணி நேரத்தில் உறங்கும் பொழுது வீடியோ எடுத்து காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்
மேலும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுனர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.