ஆய்வோ ஆய்வு!

ஆய்வோ ஆய்வு!

 ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் அருகே நரியம்பட்டில் சிறுபான்மை நல இயக்குநர் கடனுதவி பெற்றவர்களை சந்தித்து ஆய்வு மேலும் சோலூர் அரசு சிறுபான்மை நல கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியையும் ஆய்வு செய்தார்

 திருப்பத்தூர்மாவட்டம்,ஆம்பூர் அருகேயுள்ள நரியம்பட்டு கிராமத்தில் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர் சுரேஷ் குமார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவுடன் சென்று கடனுதவி பெற்று சுய தொழில் துவங்கிய சிறுபான்மை மக்களை சந்தித்தார்.

 அப்போது, கடனுதவிகள் பயனளிக்கும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்தார். அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

   இதே போல் சோலூரில் உள்ள அரசு சிறுபான்மை நல கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியையும் ஆய்வு செய்து மாணவர்கள் உணவு உள்ளிட்டவைகள் தரமானதாக வழங்கவும் அறிவுறுத்தினார்.