கூலித்தொழிலாளியின் மகள் காமன்வெல்த் போட்டிக்கு செல்கிறார்! ஆட்சியர் மற்றும் அயல்நாட்டு வாழ் இந்தியர் உதவி!

கூலித்தொழிலாளியின் மகள் காமன்வெல்த் போட்டிக்கு செல்கிறார்! ஆட்சியர் மற்றும் அயல்நாட்டு வாழ் இந்தியர் உதவி!

 ஜி.கே.சேகரன்,

 வலுதூக்கும் போட்டியில் காமன் வெல்த் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த துப்புரவு தொழிலாளியின் மகளுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு நபர் ரூ.2. 50 லட்சம் ஆட்சியர் மூலம் வழங்கி காமன் வெல்த் போட்டிக்கு அனுப்புகின்றனர்.

 வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மாநகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர் லட்சுமி இவரது மகள் கவிதா.

   உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்து வலுதூக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளார் இவர் காமன் வெல்த் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  ஆனால் இந்த போட்டியில் கலந்துகொள்ள சுமார் ரூ,.3 லட்சம் போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்தையும் செய்ய வேண்டி இருந்ததால் இவர் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்விகுறியாக இருந்தது.

  கவிதா குறித்து வந்த செய்தியை அறிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ,ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.

  மேலும் பொதுமக்கள் உதவிட வேண்டுமென கேட்டுகொண்டார். இதன் அடிப்படையில் வேலூர் கஸ்பாவை சேர்ந்த எட்வின் என்பவர் ஷார்ஜா நாட்டில் மன்னரின் அரண்மனையின் இயக்குநராக பணிபுரிகிறார்.

   சமூக வளைதலங்களிலும் செய்திதாள்களிலும் வந்த செய்தியை அறிந்த அவர் அவரது சகோதரர் ரோசாரியா மூலம் கவிதா போட்டியில் க்லந்துகொள்ள தேவையான ரூ.2.50 லட்சம் நிதியினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கி அந்த மாணவியிடம் வழங்க கோரினார்கள்.

   இதன் மூலம் துப்புரவு தொழிலாளியின் மகள் காமன் வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார் தனக்கு நிதியுதவி செய்த அனைவருக்கும் கவிதா நன்றியை கூறினார்.