ஊழியர்களின் ஊதிய உயர்வு வழங்க தேவையற்ற காலதாமதம்! போராட்டம்!!

ஜி.கே.சேகரன்,
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் கூட்டுறவு வங்கிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவையாற்றும் வங்கி ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வை அரசாணியாக வெளியிட குறையும் கூட்டுறவு வங்கிஊழியர்கள் தர்ணா போராட்டம்,
வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட வங்கி சங்க பொதுச் செயலாளர் மில்டன் தலைமையில் நடந்த இதனை ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இந்த தர்ணா போராட்டத்தில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையில் மாநில அளவில் தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு விவசாய ஊரக வளர்ச்சி வங்கி மாவட்ட அளவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்கநிலை கூட்டுறவு நகர வங்கிகள் தொடக்க வேளாண்மை வங்கி கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராமங்களிலும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
இந்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இவர்கள் மாநில அரசு ஊதிய உயர்வு தொடர்பாக அரசாணை மாநில அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் வங்கி ஊழியர் சங்கங்கள் மூலமாக கடந்த 2020-இல் கோரிக்கைகள் மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக ஒப்பந்த காலம் முடிவடைந்து 30 மாதங்கள் முடிவந்துள்ளது சங்கங்களின் பதிவாளர் தொழிற்சங்கங்கள் இடையில் பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வினை அரசாணை மூலமாக வெளியிடுவதில் பதிவாளர் அலுவலகம் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் விலைவாசிகளின் சுமைகளை தாங்க முடியாமல் கூட்டுறவு வங்கி உயிர்கள் வேதனைப்பட்டு வருகின்றனர் ஊழியர்களிடையே மன உளைச்சலும் தேவையற்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது எனவே கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம் மூலமாக தங்கள் ஊதிய உயர் கோரிக்கையை அடைய வேண்டி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் திரளான கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.