குறுஞ் செய்திகளில் ஆங்கிலம் கலந்த தமிழா? இறையன்பு வேதனை!

கு.அசோக்,
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் தமிழை சரியாக உச்சரிக்கவும் எழுதவும் தெரியாமல் இருக்கின்றனர் -தமிழ் இளைஞர்கள் இடையே தமிழை உச்சரிக்கும் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது- குறுஞ் செய்திகளில் ஆங்கிலம் கலந்த தமிழ் கலக்கிறார்கள் - வேலூரில் நடைபெற்ற மகளிர் கல்லூரி முத்தமிழ் விழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூர் சாய்நாதபுரத்தில் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா கல்லூரி செயலாளர் மணி நாதன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் பானுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு பேசுகையில் தமிழை நாம் அனைவரும் நாம் அனைவரும் வளர்க்க வேண்டும் தமிழ் இளைஞர்கள் இடையே தமிழை உச்சரிக்கும் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.
குறுஞ் செய்திகளில் ஆங்கிலத்தை கலந்து தமிழ் செய்தியாக அனுப்புகின்றனர், ஆனால் பல மொழிகளை அறிந்த தமிழ் புலவர்கள் அயல்நாட்டு தமிழ் புலவர்கள் கூட தமிழின் பெருமை கூறியிருக்கிறார்கள் என வேதனையுடன் பேசினார்.