மோட்டார் பைக்கில் சென்று நீர் நிலைகளை ஆய்வு செய்த கலெக்டர்!

ஜி.கே.சேகரன்,
விரிஞ்சிபுரத்தில் ஆற்று வெள்ளத்தில் சேதமான தரைப்பாலம் மற்றும் மாதனூர் உள்ளி தரைப்பாலம் மற்றும் செவ்வந்தி ஏரியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.மற்றும் பயிற்சி ஆட்சியர் செல்வி ஐஸ்வர்யா ஆகியோ நேரில் ஆய்வு செய்தனர்.
வேலூர்மாவட்டம்,விரிஞ்சிபுரத்தில் பாலாற்றில் ஏற்பட்ட அதிக அளவு வெள்ளத்தின் காரணமாக தரைபாலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி சேதமானது இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாக கேவிக்குப்பம் மற்றும் குடியாத்தம் செல்லும் மக்கள் பாதிக்கபட்டனர்.
வெள்ளத்தின் அளவு அதிகமாக இருந்ததால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இதே போன்று மாதனூர் பாலாற்றிலும் வெள்ளம் ஏற்பட்டு மாதனூர் - குடியாத்தம் செல்லும் தரைபாலம் முழுவதுமாக சேதமடைந்தது வெள்ளம் அதிகமாக சென்றதால் இங்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விரிஞ்சிபுரம் தரைப்பால பகுதிகளையும் மற்றும் மாதனூர் உள்ளிதரைப்பாலத்தையும் நேரில் ஆதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இந்த இரண்டு பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் தரைபாலங்களை பயன்படுத்துவதால் மழைகாலங்காலத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனால் இவ்விருஇடங்களிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் கலந்தாலோசனை செய்தார்.
பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆட்சியர் செருவங்கி ஏரியையும் பார்வையிட்டார் ஏரி மற்றும் ஆறுகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகளிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் செருவங்கி ஏரி நிரம்பியது ஆனால் ஏரியில் உடைப்பு ஏற்படும் நிலை இருந்தது அதனை தடுக்க 10 ஆயிரம் மணல் மூட்டைகளை கொண்டு மூடி நகராட்சி ஊழியர்கள் அதனை தடுத்தனர்.
தற்போது விளைநிலங்களில் புகுந்த நீர் அகற்றப்பட்டு வருகிறது மற்றும் மின் ஒயர்கள் சேதம் அதனை சரி செய்யவும் கூறியுள்ளோம் அனைத்து ஏரிகளையும் ஆய்வு செய்ய பிர்காவாரியாக குழுக்களை அமைத்துள்ளோம் அதனை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.