ஊழலை மூடி மறைத்த ஆணையர்!

ஊழலை மூடி மறைத்த ஆணையர்!

 ஜி.கே.சேகரன்.

 கட்டப்படாத கழிவுநீர் கால்வாயை கட்டியதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் அளித்த மாநகராட்சி. மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்து விசாரணை.

   வேலூர் மாநகராட்சி காட்பாடிக்குட்பட்ட ஒன்றாவது மண்டலம், ஒன்றாவது வார்டுக்குட்பட்ட ராஜிவ்காந்தி நகர் 3- ஆவது தெருவில் கழிவு நீர் கால்வாய் கட்டப்படாமலேயே, 9 லட்சத்தி 90 ஆயிரத்தில் கட்டி முடித்ததாக துரை என்பவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டம்  மூலம் தகவல் வழங்கப்பட்டது.

 இந்நிலையில் சம்பவ இடத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

மேலும் மொத்தம் 3 தெருக்களுக்கு ஒதுக்கிய நிதியில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

   ஆய்வுக்கு பின்னர் அவர் கூறுகையில், 9 லட்சத்தி 90 ஆயிரம் என்பது 3 தெருக்களுக்கும் ஒதுக்கிய நிதி ஆகும். ஆனால் 2 தெருக்கலுக்கு கால்வாய் அமைக்கவே மொத்த நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதில் முறைகேடு நடைபெறவில்லை. மேலும் 3 ஆவது தெருவுக்கு கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.