டேம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிவாரண தொகை வழங்காததால் நீதிமன்ற தீர்ப்பு!

ஜி.கே.சேகரன்,
ஆண்டியப்பனூர் பகுதியில் டேம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நிவாரண தொகை வழங்காததால் நீதிமன்ற தீர்ப்பு! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அசையும் அசையா பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வந்ததால் பரபரப்பு உண்டானது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் சுற்றுவட்டாரப் அதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் ஆண்டியப்பனூர் டேம் கட்ட சுமார் 314க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் 2000 ஆம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
இத்தனைக்கும், அரசு நிர்ணயித்த தொகை சுமார் 102 கோடி மதிப்பிலான 140 க்கும் மேற்பட்ட ஏக்கரை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் கொடுத்த நிலத்திற்கான தொகையை கொடுக்காத காரணத்தினால் சுமார் 314 விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உடனடியாக உத்தரவிட்டது.
மேலும் வேலூர் நீதிமன்றத்தில் 4 விவசாயிகளுக்கு ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது அதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அசையும் மற்றும் அசையா பொருட்களை ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள வழக்கறிஞர் ரவிக்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கறிஞர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் பேசியபோது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தங்களுக்கு உரிய 102 கோடி ஒப்படைக்கப்படும் என கூறியதன் பேரில் ஜப்தி நடவடிக்கையை ஒரு மாத காலம் தள்ளி கேட்டுக் கொண்டுள்ளார்.இதன் காரணமாக ஜப்தி நடவடிக்கை ஒரு மாத காலத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.