மார்பகங்கள் குறித்து பெருமை அடைவதாக முன்னாள் பெண் எம்.பி. பரபரப்பு பதிவு!

ஜார்ஜ் ரவி,
போராட்டத்தின் போது ஏற்பட்ட அசாதரன சூழலில் ªமுன்னாள் பெண் எம்.பி.யினுடைய மேலாடை விலகியதை பலர் கொச்சைப்படுத்திய நிலையில் என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா தான் இந்த பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்த விவரம் வருமாறு,
இலங்கை பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரது கொழும்பிலுள்ள வீட்ட்டருகே ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு, போலீஸார் பாதுகாப்பு வேலிகளை அமைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை போட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட முன்னாள் எம்.பி. ஹிருணிகா பிரேமசந்திர, போலீஸாருடன் முட்டி மோதி ரணில் வீட்டுக்குள் நுழைய எகிறினார்.
அப்படியிருக்க போலீஸாருக்கும், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது அந்தக்காட்சிகளை பலம் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர், ஹிருணிகா பிரேமசந்திரவின் மார்பகங்கள் குறித்து ஏடாகூடமான பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இந்த பதிவுகளை கவனித்த ஹிருணிகா பிரேமசந்திர, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையான பதிவொன்றை வெளியிட்டார். ''எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமை அடைகின்றேன். நான் மூன்று அழகிய குழந்தைகளுக்கு இதனூடாக தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, எனது முழு உடலையும் அவர்களுக்கு அர்ப்பணித்தேன். பலர் பார்க்கும்படியாக தென்பட்ட மார்பகங்களை வைத்து கேலி, கிண்டல் செய்பவர்கள்,
தாம் குழந்தைகளாக இருந்த போது, அவர்களின் தாய்மார்களின் மார்பகக் முலைக்காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
எப்படியும், எனது மார்பகங்கள் குறித்து நீங்கள் பேசி, மீம்ஸ்களை உருவாக்கி, சிரிக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்பது உங்களுக்கு தெரியவரும்" என அவரது பேஸ்புக்கில் மிகுந்த உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை அறிந்த ரணில் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். அதில் ஹிருணிகாவின் தாய்மையை அவமதிக்க வேண்டாம் - ரணில்
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் விதத்திலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் எனலவர்பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.தாய்மையை அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.