முறைகேடு அலுவலர்களை போலிசில் பிடித்து  கொடுப்பேன்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

முறைகேடு அலுவலர்களை போலிசில் பிடித்து  கொடுப்பேன்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

  ஜி.கே.சேகரன்

  அரசு சார்பில் மக்களுக்காக வீடு கட்ட வழங்கபடும் தொகையில் முழு தொகையையும் அதிகாரிகள் மக்களிடம் வழங்க வேண்டும், இதில் முறைகேட்டில் ஈடுபடுவது கையூட்டு வாங்குவது என ஏழை மக்களிடமிருந்து  புகார் வந்தால் நானே முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை போலீசில் பிடித்துகொடுத்துவிடுவேன் மக்கள் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு  ஊழல் புகார்களை தெரிவிக்கலாம் என அரசு விழாவில் வெளிப்படையாக பேசி தனது கைபேசி எண்ணை மக்களுக்கு தெரிவித்தார் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

 வேலூர் மாவட்டம்,வேலூரில் கஸ்பா பகுதியில் ரூ.1. 8 கோடி மதிப்பில் சமூதாய கூடத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பின்னர் காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலையில் கீரைசாத்து ஊராட்சி ஜி.ஆர் குப்பம் மக்கள் 36 பேருக்கு அரசின் சார்பில் ரூ.,2.70 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையை பயனாளிகளிடம் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

  இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  பின்னர் விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையில் தான் ஊராட்சி ஒன்றிய குழு மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட பதவிகளுக்காக திமுக சார்பில் போட்டியிட்டவர்களை இத்தொகுதியில் வெற்றி பெற செய்துள்ளனர்.

  மக்கள் நீங்கள் வீடுகளை கட்டி பயனடைய வேண்டும் ஆனால் சில புகார்கள் வருகிறது சில அதிகாரிகள் வீடு கட்ட ஒதுக்கபடும் பணத்தில் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் வருகின்றன.

  ரூ.2. 70 லட்சத்தில் வீடு கட்ட வேண்டும் என்பதே குறைந்த தொகை இவர்கள் ஏழை மக்கள் தலை காய்ந்தவர்கள் இவர்களிடம் முறைகேட்டில் ஈடுபட்டு அது தொடர்பாக புகார் வந்தால் அதிகாரி யார் முறைகேடு செய்தாலும் நானே அவர்களை போலீசில் பிடித்து கொடுத்துவிடுவேன்.

  உங்களுக்கு பணம் வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் இவர்கள் ஏழை மக்கள் ஆகையால் நீங்கள் எனது தொலைபேசி எண்ணை குறிப்பிடுகிறேன் அதனை பத்திரப்படுத்தி வைத்துகொள்ளுங்கள்.

  யாராவது முறைகேட்டில் ஈடுபட்டால் என்னிடம் புகார் கூறுங்கள் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என பேசினார்.