பள்ளிகூட மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!11-ஆம் வகுப்பு மாணவன் கைது!       

பள்ளிகூட மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!11-ஆம் வகுப்பு மாணவன் கைது!       

 செ.ஜான் மரியஜோசப்,

 கோவையை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை தன்னுடன் பள்ளியில் படித்து வரும் மாணவருடன் கடந்த 5 ஆண்டுகளாக, நட்புரீதியாக பழகி வந்தாராம்.

  இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பள்ளி நண்பரின் வீட்டிற்கு மாணவி புத்தகம் வாங்குவதற்காக சென்ற பொழுது மாணவநண்பன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.

  அதே போல் அடிக்கடி உறவு வைத்துக் கொண்டதாகவும், மாணவி, கடந்த ஒரு வாரமாக வாந்தி எடுத்து கொண்டிருப்பதால் சிறுமியின் தாய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்ட பொழுது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

  பள்ளி மாணவி  என்றும் பாரமல் திருமண ஆசை காட்டி உடலுறவு வைத்துக் கொண்டு தன்னை கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய பள்ளி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

  இரண்டுபேருக்குமே ஒரே வயசுதான், ஆனால் சிறைக்கம்பிக்கு பின்னால் ஆண் மகன் மட்டும் சிக்கியிருக்கிறார். என்ன செயவது சட்டம் அப்படித்தான் சொல்கிறது.