போலிசாரை தாக்கிய இருவருக்கு சிறை!

ஜி.சாந்தகுமார்,
டாஸ்மாக் சரக்கு போதையில் போலிசாரிடம் தகராறு செய்து தாக்கி, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 24; சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிகிறார். இவர், கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரில் உள்ள சிறப்பு காவல் படையினர் தங்கும் பேரக்ஸ் அறையில் தங்கியுள்ளார்.சரண்ராஜ் மற்றும் சக காவலர் பார்த்திபன் ஆகியோர் 18ம் தேதி இரவு, வெளியில் சாப்பிட்டு விட்டு தங்கும் அறைக்கு வந்துள்ளனர்.
அப்போது, சாஸ்திரி நகர் பகுதியில் மது போதையில் இருந்த, நான்கு நபர்கள் காவலர்களிடம் வீண் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி தப்பினர். இதில், சரண்ராஜ் காயமடைந்தார்.பின், நள்ளிரவில் காவலர்கள் தங்கிருந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற காவலர்களின் 'பஜாஜ் பல்சர்' மற்றும் 'பேஷன் புரோ' வாகனங்களை, இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஓடிவிட்டனர்.
அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 19, காமேஷ், 19 ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரித்தால் ஊர்கார பயலுவ வேறு ஒரு கதையை சொல்லுறாங்களாம்..அது சரி..