முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் செயலி! கடும் எதிர்ப்பு!

முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் செயலி! கடும் எதிர்ப்பு!

 டி.முகமது இர்பான்,

  முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியில்லாமல் பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் செயலியை சிலர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். சல்லி டீல்ஸ், புல்லி பாய் என்கிற அந்த செயலி மூலம் 'டீல் ஆஃப்தி டே' என்று வரவேற்கிறார்கள்.

 இதனால் கோபமுற்ற சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார்.

 மேலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் தன்னுடைய படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி போலீஸில் புகார்  அளித்துள்ளார்.

 இதில் குறிப்பாக  முஸ்லிம் பெண்களை அவதூறு செய்யும் வகையில் புகைப்படங்களை அவர்களுக்குத் தெரியாமலேயே பதிவேற்றம் செய்து ஏலம் விடும் அந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒவைசி எம்.பி. காங்கிரஸ் எம்.பி.கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  சல்லி டீல்ஸ், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு 'டீல் ஆஃப்தி டே' என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவர்கள் முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்து இதை இயக்கியிருக்கிறார்கள்.

  விபரீதம் ஏற்படும் முன் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும், அந்த செயலியை அறிமுகப்படுத்தியவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஜமாத்துகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.