முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவு!

முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவு!

   டி.முகமது இர்ஃபான்,

 முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமறைவாகியுள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  மேற்படி சரோஜாவின் உறவினர் குணசீலன் என்பவர், சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மோசடி புகார் ஒன்றை அளித்தனர்.

 அதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக , நாமக்கல் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

  புகாரின் பேரில் நடந்த விசாரணையில் , 15 பேரிடம் , 76.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

  இதையடுத்து, சரோஜா , லோகரஞ்சன் மீது , மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

   இந்த வழக்கில் சரோஜாவும் அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது நாளை  விசாரணைக்கு வருகிறது.

  இந்நிலையில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் சரோஜா மற்றும் கணவர் லோகரஞ்சன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக போலிசார் சொல்கிறார்.

  அதை உறுதிபடுத்தும் விதமாக சரோஜா மற்றும் அவரதுகணவர் ஆகியோரது செல்போன்கள் சுவிட்ச் செய்யப்பட்டுள்ளதாம்.

அது சரி.,