போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி திருவண்ணாமலையில் கைது!

உ.சசிகுமார் ,
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்கிற சொல்லுக்கேற்ப அவ்வப்பொழுது ஏடாகூட பண மோசடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் மின்சாரத் துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக பணம் பறிக்க முயன்ற போலி ஐஏஎஸ் அதிகாரியை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதி வானவில் நகரில் வசிப்பவர் சவுந்தர்ராஜன், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மின்சாரத் துறையில் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்ய சென்ற போது சௌந்தர்ராஜனுக்கும், சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியுள்ளார்.
அப்படியிருக்க அவர் சென்னையில் பணியாற்றி வரும் சௌந்தர்ராஜன் மனைவிக்கு பணி மாறுதல் பெற்று தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சவுந்தர்ராஜன் மனைவில்லு பரிந்துரையும் இன்றி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி மாறுதல் கிடைத்தது. ஆனால் தன்னால் தான் பணி மாறுதல் கிடைத்ததுலென்றூம், அதற் குஎனக் கூறி சௌந்தர்ராஜனிடம் பணம் கேட்டு திருவண்ணாமலைக்கு வந்த சுபாஷ் பணம் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர், திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சௌந்தர்ராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சுபாஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் மதுரவாயில், சிந்தாதிரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது தெரிய வந்தது.
இவரை சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடிபட்ட சுபாஷிடம் ஐ.ஏ.எஸ் ஆர்.டி.ஓ முதன்மை செயலாளர் என பல்வேறு அரசு பதவிகளுக்கான அரசு சின்னத்துடன் கூடிய போலி அடையாள அட்டைகள் இருந்ததாகவும், தன்னை அரசு அதிகாரி என கூறிவேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு பிரச்சனை முடித்து வைப்பதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பிடிபட்ட போலி அதிகாரியிடம் விசாரித்த போது அவனுடன் தொடர்பில் இருந்த பலரின் பெயரை தெரிவித்துள்ளானாம்.