மலையடிவார மக்களுக்கு மாற்று இடம்! பாறை விபத்து விவகாரத்தில் ஆட்சியர் பேட்டி!

  ஜி.கே.சேகரன்,

  வேலூரில் அடர் மழையின் காரணமாக பாறை உருண்டு மூன்று பேர் பாறைக்கு அடியில் சிக்கினர். மீட்பு நடவடிக்கை மும்முரமாக நடந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி., மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வேலூர்மாவட்டம்,வேலூர் நகரில்  ஆட்சியர் அலுவலகம் எதிரில் காகிதபட்டறை பகுதியில் இன்று தொடர் மழையாலும் ஒரு மணிநேரம் அடர் மழையாலும் பாறை மலையிலிருந்து உருண்டு விழுந்தது.

  இதில் மலைப்பகுதியில் பிச்சாண்டி (60),நிஷாந்தி (24),ரமணி(45) ஆகியோர்  வசித்து வந்தனர்.

 இவர்கள் வசித்து குடிசை வீட்டின் மீது 7 டன் அளவுள்ள பெரிய பாறை ஒன்று வீட்டில் விழுந்தது.

   இதில்  மூன்று பேர் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

  தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொய்வு ஏற்பட்டுள்ளது அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வரவுள்ளனர்.

  தகவலறிந்த கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், எஸ்.பி.செல்வக்குமார்,ஆர்.டி.ஓ
செல்வி செ.விஷ்ணுபிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

  மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட ஆட்சியர் கூறுகையில் ஒரு பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். நாடித்துடிப்பு குறைவாகிவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

  இந்த விபத்தில் சிக்கியிருக்கும் மேலும் இருவரை மீட்க முயற்சிகள்தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

  இது போன்ற மலை புறம்போக்கு இடங்களில் வீடுகட்டி குடியிருக்கக்கூடாது. இதனால் இப்படிப்பட்ட விபத்துகள் நடந்துவிடுகிறது.

 ஆகவே இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடத்தில் இடமளிக்கப்படும் என்றார்.

குறிப்பு:-சத்துவாச்சாரியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் அமைந்துள்ள இந்த மலை புறம்போக்கு இடத்தில் மிகப்பெரிய அளவில் தங்கும் விடுதிகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன.

  தற்போது இது போன்ற வியாபார ஸ்தலங்களுக்கு  வேலூர் மாநகராட்சியின் சத்துவாச்சாரி மண்டல அலுவலர் மதிவாணன் என்பவர் பெரிய அளவில் கட்டபஞ்சாயத்து செய்து வருகிறார். அதற்காக காவல் நிலையத்தை உபயோகித்துக் கொள்கிறார்.

 இது பற்றி விசாரித்து மலை புறம்போக்கில் கட்டப்பட்டிருக்கும் லாட்ஜ்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றஇடங்களை ஆட்சியர் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறது.