பத்து வயது சிறுவன்... எஸ்.ஐ. கொலை வழக்கில் சிக்கினான்!

சுவாமிநாதன்,
ஆடு திருடர்களால் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட எஸ். எஸ். ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 10 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை பிடித்து போலிசார் ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியர் பூமிநாதன். இவர் த்ருடர்களால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பூமிநாதன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,திருச்சியில் இருந்து கொலை சம்பவம் நடந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதி வரை அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிர ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளுக்கு வலைவிரித்தனர்.
அப்படியிருக்க இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆடு திருடும் கும்பல், தஞ்சை- திருச்சி எல்லையில் இருக்கக்கூடிய கல்லணைக்கு அருகே பிடிபட்டுள்ளார்கள்.
அவர்களில் தஞ்சையை சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள், 19 வயது இளைஞர் உள்பட 3 பேரை இன்று அதிகாலை 4 மணியளவில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்கள்.
விசாரணைக்கு பின்னர் பல தகவல்கள் வெளியாகலாம்.