பாலியல் தொழிலுக்கு கூப்பிடுறாங்க:- என்னை காப்புத்துங்க-இளம் நடிகை போலிசில் புகார்!

ஜி.சாந்தகுமார்,

  சென்னை, மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய துணை நடிகை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்னா அது பாலியல் சித்ரவதை தொடர்பான புகாராகும்.

இது பற்றின விவரம் வருமாறு,

   நடிகர் கே.பாக்யராஜ் இயக்கிய உலக சாதனை 369, அகத்தியன் குறும்படம், மற்றும் சில விளம்பரப் படங்களில் நடித்த 20 வயது சிறுமி தன்னை பாலியல் தொழில் செய்ய சொல்லி ஒரு கும்பல் டார்ச்சர் தருவதாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 அதில், சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், வீட்டை விட்டு வெளியேறிவந்த போது, என் தோழி மூலம் சினேகா என்பவர் அறிமுகமானார். அவரது வீடு ராமாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ளது.

   அங்கு சில காலம் வசித்து வந்தேன். அப்போதுதான் சினேகாவின் நண்பர்கள் பிரகாஷ், ரியா, நந்தினி ஆகிய மூன்று பேர் எனக்கு அறிமுகமானார்.  பிரகாஷ், ரியா, நந்தினி ஆகியோர் சினேகா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள். அவர்கள் அங்கு மது அருந்துவதும், போதை பொருட்களை பயன்படுத்துவதும் பின்னர்தான் தெரிய வந்தது.

   இதனால் அங்கிருந்து வெளியேறலாம் என முடிவு செய்த நிலையில், சினேகா தனக்கு யாரும் இல்லை என என்னிடம் நம்பும் வகையில் பேசி அங்கேயே தங்க வைத்துவிட்டார்.

 அப்படியிருக்க ஒருநாள்,போதைப்பொருள் உட்கொண்டு அதிக மயக்கத்தில் இருந்த சினேகா நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததால் அவரிடம் விசாரித்தேன்.

   அப்போது தன்னால் போதைப் பொருள் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை, அதற்கு அடிமையாகி விட்டதாக சொன்னார். மேலும் தானும் ரியா, நந்தினி, பிரகாஷ் ஆகிய 4 பேரும் பாலியல் தொழில் செய்து தான் பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.

  ஏற்கனவே போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் என அஞ்சி வெளியேற முடிவு செய்தேன். இதைக் கேட்டதும் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். எனவே அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென எனது நண்பர் ஒருவர் மூலம் வெளியேற அறையில் இருந்த பொருட்களை காலி செய்த பொழுது சினேகா என்னை தடுத்தார்.

  அஙு நடந்த ரகசியம் அனைத்தையும் தெரிந்து கொண்டதால், தங்களை வெளியில் சென்று காட்டிக்கொடுத்து விடுவேன் என்கிற அச்சத்தில் என்னைத் மிரட்டினார்.

  இதையடுத்து 30 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அந்த அறையை விட்டு வெளியேறினேன். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயன்றுக் கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் எனக்கு போன் செய்து பாலியல் தொழிலுக்கு என்னையும் அழைப்பதோடு அவ்வாறு வர மறுத்தால் என் மீதும் எனக்கு உதவிய நண்பர்கள் மீது பண மோசடி புகார் மற்றும் பாலியல் தொழில் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர்.

  திரைத்துறையில் இனிமேல் பணியாற்ற முடியாதவாறு செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள். எனவே தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

  இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.