சர்ச்சை புகழ் இன்ஸ்பெக்டர் மீது மீண்டும் புகார்! வருத்தப்பட்டு மறுக்கிறார்!!

ம.பா.கெஜராஜ்,
சர்ச்சைக்கு பெயர் பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவரை மையப்படுத்தி ஒரு செய்தி உலா வந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த செய்தியில் உள்ள சங்கதிகள் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் மறுத்துள்ளார்.
இது குறித்து பரவிவரும் செய்தியாவது,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா காவல் ஆய்வாளராக இருப்பவர் ஆசிட் புகழ். இவர் மீது ஆற்காடு , வேலூர் காட்பாடி பகுதியில் பல புகார்கள் உள்ளன.
மேலதிகாரிகளின் தயவால் குற்றச்சாட்டுகளில் இருந்து ஒதுக்க்கப்பட்ட அவர் தற்காலிக பணியில் உள்ளார். ஆனால் இவர் அடங்கினாரா? திருந்தினாரா? என்றால் இல்லை.
தற்போது கூட ரியல் எஸ்டேட் புரோக்கர்களுடன் சேர்ந்து நில உரிமையாளர்களை மிரட்டி, பதிவு அலுவலகம் வரை பாதுகாப்புக்கு சென்று வருகின்றார்.
தற்போது கூட வேலூர் மாவட்டம், நஞ்சு கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த வயதான அப்பாதுரை, ரத்தினவேலு ஆகியோரின் நிலத்தை அபகரிக்க காவல் வாகனத்தில் சென்றபோது நிலத்தின் உரிமையாளர்கள் செல்லில் படம் எடுக்க ஆசிட் புகழ் போலிஸ் வாகனத்தில் புயலை விட வேகமாக கடந்துவிட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் எஸ்.ஐ பிரபு மற்றும் சிலரும் ஆசிட் புகழுக்கு ஆதரவாக செயல்பட்டு எதிர்தரப்பை மிரட்டி வருகின்றனர். புகழ் திருந்த மாட்டார் என்கின்றது காக்கிகள் வட்டாரம்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் புகழிடம் பேசினோம். என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். நான் யாரையும் சந்திக்கவும் இல்லை. எங்கும் செல்லவும் இல்லை. ஏன் தான் என்னை இப்படி டார்ச்சர் செய்கிறார்களோ. நான் சம்மந்தப்படாத நிலையில் இப்படி பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வருத்தப்பட்டு பேசினார்.