வாட்ஸ் அப் குழு அமைத்து கலவரம் செய்த இளைஞர்கள்! பேருந்துகள் எரிப்பு!ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மீது கல்வீச்சு!

ம.பா.கெஜராஜ்,
வாட்ஸ் அப் குழு அமைத்து கலவரம் செய்த இளைஞர்கள்,பேருந்துகளை சேதபடுத்தியதோடு அதை எரிக்கவும் செய்தனர். அவற்றை தடுக்க சென்ற காவலர்கள் தாக்கப்பட்டனர். மேலும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதால் எஸ்.பி.உள்ளிட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி இன்று (ஜூலை 17) மாணவர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம் வன்முறையாக மாறி, போலீசார் மீது கல்வீசி தாக்கினர். மேலும் போலீஸ் வாகனத்தையும் தாக்கி தீ வைத்து கொளுத்தினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்க்காரர்கள், பள்ளி கட்டடத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மாணவியின் மரணத்தை மையப்படுத்தி நடைபெற்று வந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது. பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது.
நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பள்ளி பேருந்துகளுக்கும், பள்ளிக்கு சொந்தமான டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பள்ளி அறைகள் மற்றும் சமையல் கூடத்திலும் தீ வைக்கப்பட்டது. இதில் சமையல் கூடத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் அங்கிருந்தவர்கள், பதறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர்.
இந்த வன்முறையில் சிக்கி விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவு போலீசார் இல்லாததால், 3 மாவட்டத்தில் இருந்து கூடுதல் போலீசார் கனியாமூர் விரைகின்றனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக வன்முறை நீடித்த சூழலில் போதுமான போலீசார் அங்கு வரவில்லை. கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் கலவரம் பெரிதளவில் உருவானது. போலீசார் உடனடியாக விரைந்திருந்தால், கலவரத்தை ஓரளவு கட்டுப்படுத்தி சேதத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இருந்த போதும், அதிரடி படையினர் வரவழைக்கப்பட் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைத்தனர்.
பள்ளி வளாகம் பகுதி தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி, நாயினார் பாளையம், சின்ன சேலம் உள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்டது யார் என்கிற விணா எழுந்துள்ளது.
இதற்கிடையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சிலர் மாணவர் அமைப்பினர் என கூறுகின்றனர். சிலர் ஊர் மக்கள் என்றும் , சிலர் ஒரு சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தூண்டி விட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.
இந்த கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி சார்பில் புலன் விசாரணை நடந்து வருகிறது.
அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதாக கூறினர். அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பள்ளியை சூறையாடும் நோக்கில் பலரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தி அசம்பாவிதங்களை செய்துள்ளனர். இது திட்டமிட்டு வந்த கூட்டம் போலவே தெரிகிறது.
கூடுதலாக 5 எஸ்.பி.,க்கள் சம்பவ இடத்திற்கு செல்கின்றனர். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருக்கிறார்.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் ஒரே நாளில் குழு அமைத்து போராட்டம் நடத்த பலரும் திரண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்த ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் என வாட்ஸ் அப் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தனிப்பிரிவு போலிசாரின் மெத்தனமே இதற்கெல்லாம் முழு காரணம்.
குறிப்பு:-மாணவியின் ஸ்ரீமதியின் இறப்பை தற்கொலை என்று நாடகமாடும் சக்தி தனியார் பள்ளியில் இதேபோன்று 7 கொலைகள் நடந்திருப்பதாக சின்னசேலம் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கூட செட்டியாரின் மகன் கொலை செய்யப்பட்டு முப்பது லட்சம் ரூபாய் பள்ளி நிர்வாகம் வழங்கியதாகவும் இதே போன்று பல மாணவ மாணவிகள் கொலை செய்யப்பட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் பல லட்ச ரூபாய் கொடுத்து சரி செய்யப்பட்டு வருவதாக சின்ன சேலம் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய குறிப்பு:- தமிழகத்திலுள்ள பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான ஏரி,குளம்,குட்டை என நீர் நிலைகளை ஆக்கிரமித்து, சட்டத்துக்கு புறம்பாக கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலவி நிறுவனத்தார், அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையினரை தம் சார்பாக வைத்துக்கொண்டு அரசு நிகழ்சிகள் பயிற்சிகள் போன்றவற்றுக்கு இடம் அளித்துவிட்டு, இலவசமாக கொடுத்தோம் என்று பீத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போன்ற கல்வி நிறுவனங்களில் ஏற்படும் மர்ம மரணங்களை தற்கொலை என்றே சொல்ல வைக்கிறார்கள்.
இதை அரசு அலுவலர்கள் கண்டு கொள்ளவேண்டும்.