பாணாவரம் ரவுடி கொலைவழக்கில்  குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

பாணாவரம்  ரவுடி கொலைவழக்கில்  குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

கு.அசோக்,

   இராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி சரத்குமர்(22) கடந்த ஜீலை மாதம் 9-ம் தேதி பாணாவரம் அடுத்து மாலை மேடு சுடுகாட்டு பகுதியில் கொடுரமான முறையில் கை கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கொலைசெய்ப்பட்டு கிடந்தர்.

   இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் பிரபு மேற்பர்வையில் காவல் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் மேலும் 2 தனிபடைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவந்தனர்.

   இந்நிலையில் இந்த கொலை சம்மந்தமாக பாணாவரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வினோத்குமர், கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த லூவியரசன் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது குண்டர் சட்டம்  பாய்ந்தது.

    இதனிடையே  இவ்வழக்கில் சம்மந்தமுடைய கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா இவருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன்  உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்து சிறையில் அடைத்தனர்.