சேகர் ரெட்டி டைரி எஃபெக்ட்! பழனிச்சாமி-ஓ.பி.எஸ் உட்பட 12 பேருக்கு அழைப்பாணை!

சேகர் ரெட்டி டைரி எஃபெக்ட்! பழனிச்சாமி-ஓ.பி.எஸ் உட்பட 12 பேருக்கு அழைப்பாணை!

ம.பா.கெஜராஜ்,

 சேகர் ரெட்டி என்கிற பெயரை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

 தொழிலதிபர்களில் விவிஐபி என போற்றப்பட்ட அவர் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கொடிகட்டி பறந்தார்.

 ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அவர் மீது வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி பலவற்றை கைப்பற்றி, அது தொடர்பான அதிர்ச்சி சம்பவங்களை வெளியிட்டனர்.

  இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி எக்கச்சக்கமாக வாங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து, சேகர்ரெட்டிக்கு சொந்தமான காட்பாடி இல்லம், சென்னை அலுவலகம் உள்பட அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு,   24 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  அதன் பேரில், சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய ஆறு பேர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

 இந்த சோதனையின் போது சேகர் ரெட்டியின் வீட்டில் டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் பல விவிஐபிகளின் தொடர்பு குறித்த விவரங்கள் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.

 இருந்தாலும், சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என சி.பி.ஐ கூறியதால், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கு நீர்த்துப்போனது.

  இந்தச் சூழலில் சேகர் ரெட்டியின் டைரியில் இடம் பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

  இது தற்போது பல புதிர்களுக்கு விடையளிக்கும் என்று கூறப்படுகிறது.