கோல்ட் ஸ்மக்ளர் ஸ்வப்னா..... 15 மாதங்களுக்கு பின் ஜாமின்... கேரள அரசியலில் சித்து விளையாட்டு?!

ஜி.எஸ்.மேத்யூராஜ்,
பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் மாவட்டம் அட்டகுளங்கராவில் உள்ள பெண்கள் சிறையில் 15 மாதங்கள் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
ஸ்வப்னா மற்றும் ஏழு பேருக்கு எதிரான யுஏபிஏ வழக்கில் நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை தேசிய புலனாய்வு முகமையால் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஸ்வப்னாவின் தாயார் பிரபா சுரேஷ், ஸ்வப்னாவின் ஜாமீன் உத்தரவு நகலுடன் நவம்பர் 6, சனிக்கிழமை மதியம் சிறைக்கு வந்தார். பின்னர் திருவனந்தபுரம் அட்டகுளங்கரா பெண்கள் சிறையில் இருந்து தாயின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தார்.
வெளியில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு ஸ்வப்னா பதில் ஏதும் சொல்லவில்லை.
இந்த வழக்கில் என்.ஐ.ஏ அமலாக்க இயக்குநரகம் மற்றும் சுங்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி, ஜூலை 5, 2020 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திலிருந்த அவரிடம் ரூ. 15கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் - ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் பிஎஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வப்னாவும் மற்றவர்களும் நவம்பர் 2019 முதல் ஜூன் 2020 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவிற்கு 167 கிலோ தங்கத்தை கடத்தி பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக அவர்களின் ஜாமீன் மனுக்களை எதிர்க்கும் போது, என்.ஐ.ஏ உயர்நீதிமன்றத்தில் கூறியது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, ஸ்வப்னா மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள மற்றவர்களால் கேள்விக்குறீயானது.
தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள் மூலம் அவருக்கு பணம் அனுப்பப்பட்டதாக இரண்டு முக்கிய குற்றவாளிகள் கூறியதாக சுங்கத்துறை கூறியது நினைவிருக்கலாம்.
ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட 77 பக்க ஷோஸ் நோட்டீஸில் தங்கம் கடத்தல் குற்றவாளிகள் மற்றும் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்களான சரித் பி.எஸ் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் மீது குற்றச்சாட்டை எடுத்துரைத்ததும் மறக்க இயலாது.
ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்த வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர், நீதிமன்ற காவலில் சிறையில் இருந்தபோது எர்ணாகுளத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பிய கடிதத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல், முன்னாள் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் பி. தகவல் தொழில்நுட்ப முதன்மைச் செயலாளர் சிவசங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பினேஷ் கொடியேரி ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டை கூறியதாக கூறப்படுகிறது.
அவர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டதாகவும், மேலும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடரப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தங்க்கடத்தல் ராணி ஸ்வப்னா ஜாமினில் வந்துள்ள நிலையில் அங்கு இதை வைத்து சிலபல விளையாட்டுகள் ஆரம்பம் ஆகலாம்.