கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டன் சூதாட்ட முதலாளி! நடவடிக்கை கோரி அப்பாவி குடும்பம் கதறல்!

கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டன் சூதாட்ட முதலாளி! நடவடிக்கை கோரி அப்பாவி குடும்பம் கதறல்!

 D.நெல்சன்

வேலூர் அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு கடந்த 20 வருடங்களாக காட்டன் சூதாட்டம், கள்ள லாட்டரி கேரளா லாட்டரி ஒரு நம்பர் லாட்டரி போன்ற பல சட்ட விரோதமான செயல்களை செய்து வருகிறாராம். இதற்காக அடியாட்களை உடன் வைத்திருக்கிறார்.  மேலும் பல பகுதிகளில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாகவும், அது பற்றி கேட்பவர்களையும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் மிரட்டி வருகிறாராம்.

 பெரிய தாதாவாக வலம் வரும் இவர்,  சூதாட்டத்திற்கும் லாட்டரி வியாபாரத்துக்கும் எதிராக எவராவது குரல் எழுப்பினால் அவரை வீடு புகுந்து தாக்குவதும், கொலை மிரட்டல் விடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம்.

 இந்நிலையில்,  கடந்த 19ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பர்வீன் என்கிற பெண்மனியை காலில் வெட்டியதோடு, அவரது மகன் ஜாபீர் என்பவரை தலையிலும் கையிலும் வெட்டியும் மேற்படி சேட்டு மற்றும் அவரது கும்பல் அராஜகம் செய்துள்ளது.

 இது குறித்து புகாரை பாகாயம் காவல் நிலையத்திற்கு அளித்தும் சூதாட்ட கிளப் நடத்தும் சேட்டு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 எனவே ஜாபீர் மற்றும் பர்வீன் தங்கள் குடும்பத்தாருடன் வேலூர் எஸ்பி அலுவலகம் வந்து புகார் சொன்னார்கள். எஸ்.பி.யை பார்த்து புகார் அளிக்க முயன்ற போது அவர்களை மாடிக்கு அனுப்ப மறுத்த காவல் அலுவலர் ஒருவர் இங்கெல்லாம் வரக்கூடாது டிஎஸ்பி ஆபிசுக்கு போய் சொல்லுங்க என்று  திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

 இதையெல்லாம் அறிந்த சட்டவிரோத தொழில் செய்யும் சேட்டு, என்னை ஒன்றும் செய்ய முடியாது எல்லா இடத்திலும் எனக்கு ஆள் இருக்கிறது என்று கொக்கரித்து மேற்படி குடும்பத்தாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறாராம்.

   இதனால் பர்வீன் குடும்பத்தார் நாங்கள் இனி எப்படி இங்கு வாழ்வது, பாதிக்கப்பட்ட எங்களுக்கு பரிகாரம் செய்யாமல் அந்த சேட்டுக்கு எல்லோரும் சப்போர்ட் செய்கிறார்களே என்று கதறுகிறார்களாம்.